ரணிலை இன்று பார்வையிட வந்த சஜித் வெளியிட்டுள்ள தகவல்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நலம் பற்றி விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இன்றைய தினம்(26.08.2025) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
உடல்நலம் குறித்து அதிக கவனம்
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நல பாதிப்பை குணப்படுத்துவற்காக பணிபுரிந்த வைத்தியர்களுக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நலம் குறித்து வைத்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆளுங்கட்சியினர் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறிய அவர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



