இலங்கையில் பிரபலமான பந்துல எனும் யானை மரணம் - கவலையில் மக்கள்
இலங்கையில் பிரபலமான யானைகளின் ஒன்றான பந்துல நேற்று உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக மக்களை மகிழ்வித்த பந்துல நேற்று உயிரிழந்துள்ளது.
79 ஆண்டுகளாக மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்த யானை பலரின் அன்பை பெறுள்ளது.
மருத்துவ சிகிச்சை

யானையின் கால்கள் செயலிழந்ததால் கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிகவும் உயரம் கொண்ட யானையாக பந்துல பெயரிடப்பட்டுள்ளது. 9 அடி உயரம் கொண்டதாகும்.
1949 ஆம் ஆண்டு முதல் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பந்துல என்ற யானை வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கவலையில் மக்கள்

இலங்கையில் மிகவும் பிரசித்தம் பெற்ற ஒன்றாக யானைகள் உள்ளன. இதனை பார்வையிட பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வருகின்றனர்.
இந்நிலையில் பந்துலவின் மரணம் உள்நாட்டவர்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan