கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு
கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த முன்னாள் அமைச்சரை இன்று அல்லது நாளை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்கமைய, இந்த கைது இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் அது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri