வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3300 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ள இலங்கை அரசாங்கம்
நாட்டில் அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கடன் பணம் பயன்படுத்தப்படாததால், கடன் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 3300 ரூபா பிணைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் 2014 - 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு இவ்வாறு பிணைக் கட்டணம் செலுத்த வேண்டும் என 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 தணிக்கை அறிக்கையின் படி பிணைக்கட்டணமாக வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையில் 93,175,883 அமெரிக்க டொலர்கள், 1,328,347 யூரோக்கள் மற்றும் 70,213,890 யுவான்கள் ஆகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,