ஒருவேளை உணவை மட்டும் உண்டு வாழும் அவல நிலையில் இலங்கை மக்கள்
பண்டிகை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை காலம் சாப்பிட்டதை விட தற்போது குறைவாக சாப்பிடுவதாக பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் தொடர்ந்தும் கருத்த தெரிவித்த மக்கள், தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்களும், கூலித்தொழிலாளிகளும் விலை அதிகரிப்பால் பெரும் கஸ்டத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலத்தை விட பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது.
இலங்கையில் எல்லா வளமும் இருப்பதாகவும், அதனை சரிவர முன்னெடுத்து செய்வதற்கு நாட்டு பற்றுடையோர் யாரும் இல்லையெனவும் மக்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
