நிலைமை மோசமடைந்ததால் அநுர அவசரமாக எடுக்க வேண்டிய முடிவு..!
இலங்கையிலே மீண்டும் பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வுகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அத்தோடு,எதிர்க்கட்சியில் இருக்கக் கூடியவர்கள் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அளவுக்கதிகமான தரவுகளோடு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்தநிலையிலே, எதிர்க்கட்சியினர் தமது ஆட்சிக் காலத்திலே செய்த பிழைகளை மறைத்து விட்டு தற்போதைய அரசாங்கத்தை விமர்சனம் செய்வது கவலைக்குரிய விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு வித்தியாசமானது.ஊழலை ஒழிப்பதற்காக வந்த அரசாங்கம்.அரச நிதியை கையாடியவர்களை தண்டிக்க வந்த அரசாங்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்கள். முன்னைய ஆட்சியாளர்களின் சம்பவங்களினால் தான் நாடு வீழ்ச்சியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 8 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri