கோட்டாபய - மகிந்தவுக்கு இடையில் கடும் மோதல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை குறைத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது அதிகாரங்களை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் ஆளும் தரப்பிற்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் மற்றும் இம்முறை அவ்வாறு செய்யக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல தேவையற்ற நெருக்கடிகளுக்கு நிறைவேற்று அதிகாரங்களே பிரதான காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் கருதுகின்றனர். எனினும், நிறைவேற்று அதிகாரங்கள் பல பிரச்சினைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச தரப்பு கருதுகின்றது.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கும் பிரேரணையை இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தரப்பு முன்வைத்து, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியை அதிகரிக்க விடாமல் தினேஷ் குணவர்தன, ரமேஷ் பத்திரன உள்ளிட்ட அரச அதிகாரிகள் தீர்க்க முயற்சித்து வருவதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
