விசாரணைக்கு வருமாறு மகிந்த தரப்புக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு
கடந்த ஒன்பதாம் திகதி அமைதியான போராட்டத்தின் மீது குண்டர்களை ஏவிய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அழைக்கப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளையும் வாக்குமூலம் வழங்க வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, மகிந்த உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடியுள்ளனர்.
முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யும் தினமான நேற்று முன்தினம், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை தாக்குவதற்காக குண்டர்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan