பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம்
தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் தான் தொடங்கியது.

2020ல் இருந்து மூன்றரை வருடங்கள் இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
மேலும் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன சில குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, இந்நிலையைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்க வேண்டியதாயிற்று. அதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுர்தியை விட மூன்று மடங்கு நிவாரணத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம்.
மேலும், பயனாளிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.
தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.
எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகின்றோம். அடுத்ததாக தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவோம். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இத்துடன் முடிவடையாது. கடன் தள்ளுபடி செய்தாலும் மிகுதியை மீளச் செலுத்த வேண்டும்.
எனவே, நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு பதிலாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு நாங்கள் சம்மதித்துள்ளோம்.
அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலகினால், இந்த சலுகைகளை இழக்க நேரிடும். எனவே இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan