18 மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் சுமார் 18 மாங்களுக்குள் நாட்டை நாம் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை பொறுப்பேற்கும் சவால்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை பொறுப்பேற்கும் சவாலை எவரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம்.

நாட்டை நாங்கள் பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், லிபியா போன்ற நிலைமைக்கு நாடு செல்ல இடமிருந்தது.
சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து, முன்னெடுத்த போராட்டத்தாலே சுதந்திர தேசமாக மாறியது.
நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த நான்கு வருட காலத்துக்குள் கொவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணங்களால், அராஜக நிலைக்கு நாடு சென்றது.

இந்நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.75ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படும்போது, மிகவும் துரதிஷ்ட நிலையிலே நாடு இருந்தது.
நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளோம்.
76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள், மக்களின் கஷ்டங்கள் நீங்கக்கூடிய, செளபாக்கியம் கிடைகுக்கும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam