முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை! பாரிய நெருக்கடியில் இலங்கை
மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அழுத்தம் விடுத்து முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உயிர்களுடன் விளையாடும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அரசாங்கம் பதில் வழங்க வேண்டும்.
வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை..
மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் தீர்மானிக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அழுத்தம் விடுத்து முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பின்னர் தமக்கு நெருங்கியவர்களை நியமித்தனர். தற்போது அங்கிருந்த மருந்தாளர்கள் சிலரையும் நீக்கியுள்ளனர். இது போன்றதொரு நிலைமையே எரிவாயுக்கும் இருந்தது.
எரிவாயு வெடிப்புகள் காரணமாக சில உயிர்ச்சேதங்கள் பதிவாகியிருந்தது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் தயாராக இல்லை.
எரிபொருளுக்கும் இதையே நிலைமையே ஏற்பட்டது. நாம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பில் கதைத்தோம். முன்னெச்சரிக்கை விடுத்தோம்.
அவ்வாறு எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என அமைச்சரும், அதிகாரிகளும் கூறினர்.
நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. உயிர்களுடன் விளையாடும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
