ரணிலிடம் ஆட்சியை ஒப்படைப்பதே ஒரே தீர்வு! அநுரவுக்குச் சென்ற அறிவுரை

Dollar to Sri Lankan Rupee Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Government Economy of Sri Lanka
By Rakesh May 24, 2026 10:15 AM GMT
Report

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக நாடு மீண்டும் கடுமையான டொலர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்று அபிமானி ஜன ஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் திருடுவதாகக் குற்றம் சாட்டி, வெளிநாட்டு ஊழியர்களை இலங்கைக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் எனத் தடுத்த வசந்த சமரசிங்க போன்றவர்கள், இன்று 10 டொலர்களையாவது அனுப்புமாறு ஊடகங்களுக்கு முன்னால் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பிரதீப் சார்லஸ் சாடினார்.

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

பொய் கூறுவதில் ஜனாதிபதிக்கு விருது

அவர் மேலும் தெரிவிக்கையில்,  "மத்திய வங்கியின் பிரதான திறைசேரியிலுள்ள டொலர்களுக்கே ஹேக்கர்கள் கைவைக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் இன்று நாட்டில் நிலவுகின்றது.

இதனால், வெளிநாட்டு ஊழியர்கள் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தை 'பெலவத்தை ஹேக்கர்கள்' திருடிவிடுவார்களோ என்ற நியாயமான அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த உளவியல் ரீதியான பயமே நாட்டின் டொலர் வரத்து வீழ்ச்சியடைவதற்குக் பிரதான காரணமாகும்.

ரணிலிடம் ஆட்சியை ஒப்படைப்பதே ஒரே தீர்வு! அநுரவுக்குச் சென்ற அறிவுரை | Sri Lanka Economic And Political Crisis

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலத்தில் உகண்டாவில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியமை, மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பதாகக் கூறியமை, ஜப்பான் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதாகக் கூறியமை உள்ளிட்ட பல பொய்களைச் சமூகமயப்படுத்தியுள்ளார்.

பொய் கூறுவதில் ஜனாதிபதிக்கு விருதுகளையே வழங்கலாம். கடந்த காலத்தில் அவர் கூறிய பொய்கள் அனைத்தும் இப்போது அவருக்கே வினையாக மாறியுள்ளதால், ஜனாதிபதி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அரசுக்கு இப்பிறவியிலேயே 'திட்டதம்மவேதனீய' கர்ம வினை பலன் கொடுத்துள்ளதால் இவர்களால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீள வேண்டுமாயின், நாடாளுமன்றில் உள்ள ஒரே ஒரு பட்டயக் கணக்கறிஞரான ரவி கருணாநாயக்கவிடம் உடனடியாக நிதி அமைச்சைப் பொறுப்பளிக்க வேண்டும்.

டொலர் நெருக்கடியிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளதால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்துக்காவது நாட்டை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று வழி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

டொலர் நெருக்கடி

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஸ்ஸங்க, தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழல், திருட்டுத்தனம் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

வாகனங்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாலேயே டொலரின் மதிப்பு இந்தளவு உயர்ந்து பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்தது என்றும் அவர் விவரித்தார்.

ரணிலிடம் ஆட்சியை ஒப்படைப்பதே ஒரே தீர்வு! அநுரவுக்குச் சென்ற அறிவுரை | Sri Lanka Economic And Political Crisis

டொலர் நெருக்கடியால் புதிய தொழில்களைத் தொடங்க நினைத்தவர்கள் கைவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களும் தங்களது பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறவே திட்டமிடுகின்றார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றித் தெரியாத அறிவற்றவர்களை மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியமையால் அவர்கள் நாட்டை சீரழிகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஏனைய தரப்பினர் அநுரகுமாரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் பாதாளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், அதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் ரவீந்திர நிஸ்ஸங்க தனது உரையில் மேலும் வலியுறுத்திக் கூறினார். 

அவசரமாக கூடும் இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை - வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்

அவசரமாக கூடும் இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை - வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்

ஐஎம்எப் இன் புதிய நிபந்தனை! விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்..

ஐஎம்எப் இன் புதிய நிபந்தனை! விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்..

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US