இலங்கையில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம்! எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ள பேராசிரியர்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதுவரை நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.
இலங்கையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படும் போக்கு காணப்படுவதால், நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நிலநடுக்கமானிகளை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் நிலநடுக்கம் குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசை
நாட்டில் பல இடங்களில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்படவில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 1966 ஆம் ஆண்டு 'ஹண்டர் சர்வேயர் நிறுவனம்' இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கிய போது, கொழும்பில் இருந்து நாட்டின் உட்பகுதி வரை அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும், அது என்ன என்பதை செயற்கைக்கோள்கள் அடையாளம் காணவில்லை என்றும் சேனாரத்ன கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam