இலங்கையில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம்! எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ள பேராசிரியர்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதுவரை நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.
இலங்கையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படும் போக்கு காணப்படுவதால், நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நிலநடுக்கமானிகளை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் நிலநடுக்கம் குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசை
நாட்டில் பல இடங்களில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்படவில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 1966 ஆம் ஆண்டு 'ஹண்டர் சர்வேயர் நிறுவனம்' இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கிய போது, கொழும்பில் இருந்து நாட்டின் உட்பகுதி வரை அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும், அது என்ன என்பதை செயற்கைக்கோள்கள் அடையாளம் காணவில்லை என்றும் சேனாரத்ன கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam