ஒரே நாளில் அதிக வருமானம் ஈட்டிய உயிரியல் பூங்காக்கள்!
உலக சிறுவர் தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இந்த ஆண்டு ஒரே நாளில் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீரவுக்கும் அறிவித்துள்ளது.
மொத்த வருமானம்

உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் மொத்த வருமானம் ஐம்பது லட்சத்து எண்பத்தாயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (50,8377 ) ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.
பின்னவல அலு பாதுகாப்பு மையம் 947,000 ரூபாயும், பின்னவல மிருகக்காட்சிசாலை 949,200 ரூபாயும், ரிதியகம சஃபாரி பூங்கா 856,000 ரூபாயும் ஈட்டியுள்ளது.
இலவசமாக பார்வையிட அனுமதி

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் துறை, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு உயிரியல் பூங்காவிற்குள் இலவசமாக செல்ல அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri