சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை சிறுவர்கள் மற்றும் முதியோர் இன்று (01.10.2022) இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம்
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர், சிறுமியர் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக பார்வையிட அனுமதி
தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய மிருகக்காட்சிசாலையை பார்வையிட அனுமதி இலவசமாக வழங்கப்படுள்ளது.