பாம்புக் கடிக்கு மருந்தின்றி 20 பேர் பரிதாப உயிரிழப்பு: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்
பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்தார்.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில மருந்துகளுக்குத் தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையவுள்ளது என்றும் அவர் கூறினார்.
வைத்தியசாலை களஞ்சியங்களில் இருந்து 20 வீதமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், அவையும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையவுள்ளன என்றும் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
தற்போது வைத்தியசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு
மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும், வயதான நோயாளிகளை விட இளம்
நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam