நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் குணதிலக்க ராஜபக்ச
நாட்டின் நெருக்கடி நிலை
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் நாடு இன்று நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றதன் பிரதான பொறுப்பு சில உயர் அதிகாரிகளைச் சாரும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சில ஆலோசனைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு வழங்கப்பட்டது.
கோட்டாபயவை பிழையாக வழி நடத்தியவர்கள்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோர் இவ்வாறு கோட்டாபயவை பிழையாக வழிநடத்தியவர்களில் முதன்மையானவர்கள்.
உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு விலகவும், நாட்டை விட்டுச் செல்லவும் நேரிட்டது என குறிப்பிட்டுள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

தடைகளை மீறி ரஷ்யா பக்கம் சாயும் சுவிட்சர்லாந்து: சுவிஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கை News Lankasri
