இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழுவில் சங்கக்கார! தலைவராக எரான்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) இடைக்கால தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(28) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியதை தொடர்ந்து, இந்த நியமனம் இன்று(29.04.2026) விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவால் அமைச்சக வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைவருடன் குழு உறுப்பினர்களும் நியமனம்
இதன்படி, எரன் விக்ரமரத்ன - (தலைவர்), ரொஷன் மகாநாம, குமார் சங்கக்கார, துஷிர ரடெல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப்ஸ் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

"கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு" வழிவகுக்கும் வகையில் இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று கூறி, இலங்கை அரசாங்கம் புதன்கிழமை தீவின் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது.
இலங்கை கிரிக்கெட் (SLC) நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பாகும், ஆனால் அது ஊழல் மற்றும் நிர்வாகக் குறைபாடு குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தலையிட்டதைத் தொடர்ந்து, நான்கு முறை SLC தலைவராக இருந்த ஷம்மி சில்வா, தனது முழு குழுவுடன் நேற்று பதவி விலகியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO