அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இடைக்கால குழு : நாளை பரிசீலனை
அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய அமர்வு பரிசீலிக்கவுள்ளது.
இந்த நீதிப்பேராணை கோரிய மனுவின் விசாரணையில் இருந்து முன்னதாக நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரக்கோன் உட்பட்ட நீதியரசர்கள் விலகிக்கொண்டனர்.
நட்ட ஈடு கோரிய ஷம்மி
இதனையடுத்து மனுவை விசாரணை செய்ய நான்காவது புதிய அமர்வு நியமிக்கப்பட்டு, அது நாளை மனுவை பரிசீலிக்கவுள்ளது.

இந்த மனுவை இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக அமைச்சர் இடைக்கால தடையை விதித்தமை அவதூறான செயல் என்று தீர்ப்பளிக்கக்கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக அவர் 4 பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam