இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
கம்பஹா மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கினிகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் எடரமுல்ல அக்பர்டவுன் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அவசர நிலை
கோவிட் தொற்றினால் உயிரிழந்த கினிகம பிரதேசத்திலுள்ள வயோதிபப் பெண் கோவிட் எதிர்ப்புத் தடுப்பூசிகள் போடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட்-19 தொற்று காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam