இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை - சீனா
இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நீண்டகால பங்காளித்துவம்
இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரஸ்பர செழுமையை வளர்ப்பதற்கு முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri