இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை - சீனா
இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நீண்டகால பங்காளித்துவம்
இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரஸ்பர செழுமையை வளர்ப்பதற்கு முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri