அரசாங்கத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊடக அறிக்கைகள் அல்லது விமர்சனங்கள் ஊடாக, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்குப் பாதகம் விளைவிக்கும் வகையிலும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவை சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான தவிர்க்க முடியாத தூண்களாகும்.

எனவே, நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதுடன், அது எந்தவித அழுத்தங்களுக்கும் அல்லது தலையீடுகளுக்கும் உட்பட்டிருக்கவில்லை என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் அதன் செயற்பாடுகள் அமைந்திருப்பது மிக முக்கியமானதாகும்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri