அணுசக்தி அல்லாத நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிக்கிறது: விஜித் ஹேரத்
அணுசக்தி அல்லாத நாடுகளுக்கு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிப்பதாக, இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) கூறியுள்ளார்.
குறிப்பாக மத்திய கிழக்கில் அணு ஆயுதம் இல்லாத மண்டலங்களை நிறுவுவதை ஆதரிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத் தடை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டின் உயர்மட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எடுத்துரைத்த அமைச்சர், புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுதக் குறைப்புக்கான இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் நாடு இணைந்ததையும், 2023 இல் விரிவான அணு-சோதனை-தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்ததையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளியை இராணுவமயமாக்குதல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை, அவர் இதன்போது எழுப்பியுள்ளார்.
ஆபத்தான தன்னாட்சி ஆயுத அமைப்புகளைத் தடை செய்வதற்கும், விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்குமான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |