கட்டுப்படுத்த முடியாத ஆர்ப்பாட்டங்கள் இனி இலங்கையில் நடக்கும்! ரணில் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Benat Oct 12, 2022 07:31 AM GMT
Report

தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் கடந்த மாதங்களில் இடம்பெற்றதை விட , பாரதூரமான மக்கள் எழுச்சி ஏற்படும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைப் போன்று அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தால் , கடந்த மாதங்களை விட பாரிய மக்கள் எழுச்சி போராட்டங்கள் தோற்றம் பெறுவதை எவராலும் தடுக்க முடியாது.

இறையாண்மையை மீற இடமளியோம்

கட்டுப்படுத்த முடியாத ஆர்ப்பாட்டங்கள் இனி இலங்கையில் நடக்கும்! ரணில் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை | Sri Lanka Anti Govt Protest Economic Crisis

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஏற்கனவே காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த கால கட்டத்திலேயே இந்த தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொண்டார். தற்போது அவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. ஆனால் எந்த திருத்தமானாலும் அதனை விரைவாக மேற்கொள்ளுமாறே வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து மக்களின் இறையான்மையை மீற முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் இடமளியோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் தேர்தலில் போட்டியிட்டால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பது தெரியும். எனவே தான் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

இனி வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது

கட்டுப்படுத்த முடியாத ஆர்ப்பாட்டங்கள் இனி இலங்கையில் நடக்கும்! ரணில் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை | Sri Lanka Anti Govt Protest Economic Crisis

தேர்தலைக் காலம் தாழ்த்துவதன் மூலம் நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் கடந்த மாதங்களில் இடம்பெற்றதை விட , பாரதூரமான மக்கள் எழுச்சி ஏற்படும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைப் போன்று அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளை வெற்றி கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த அமர்வை விட , இம்முறை இடம்பெற்ற அமர்வில் மிகக் குறைவான நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. நட்பு நாடுகள் பலவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ கடன் சுமையை கொண்ட நாடாக இலங்கையை மாற்றினார். கோட்டாபய ராஜபக்ச வங்குரோத்து நாடாக்கினார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடுத்த வருமானம் பெறும் நாட்டை குறை வருமானம் பெறும் நாடாக்கியுள்ளார்.

இந்த ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்பதோடு , மக்களை ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டார்.  

12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US