சிறப்பு பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சனத் மற்றும் மிலான் ஜயதிலக்க
கொழும்பு காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் சிறப்பு பாதுகாப்புடன் சிறைச்சாலையில் இருந்து இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் நாடாளுமன்ற அவையில் இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இவர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு நேற்று சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவித்ததாக நாடாளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 3 மணி நேரம் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
