இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சபாத் மையங்களுக்கு விசேட பாதுகாப்பு
நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட சபாத் மையங்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நாட்டின் பல மாவட்டங்களில் அமைந்துள்ள சபாத் மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க ஏற்கனவே அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் குறித்த சபாத் மையங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்படுகின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரஜைகள்
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், சபாத் மையங்களுக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகள் பாதுகாப்பான சூழலில் தங்கள் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இடங்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் தரப்பு கூறுகிறது.
மேலும், நாட்டில் வசிக்கும் எந்தவொரு வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பொலிஸ் தரப்பு தயாராக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், வெளிநாட்டினர் இலங்கையில் பாதுகாப்பாக தங்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க தாம் உறுதிபூண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
