பொலிஸார் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து உணவு அருந்த வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு உட்கொள்ளும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் ஒன்றுக்கூடும் போது கோவிட் பரவ கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் பணியாற்றும் இடங்களில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது கட்டாயமாகும். அத்துடன் பணியாற்றும் இடத்தில் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை இடைக்கிடையே பரிசோதிக்க வேண்டும்.
ஊழியர்கள் அடிக்கடி கை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த நிறுவனங்களின் பிரதானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
