ஊடகவியலாளர்களை அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக கோரும் ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்புவே நாம் வந்துள்ளோம். அவ்வாறெனில் நான் ஊடகவியலாளர்களிடம் கோருகின்றேன், நீங்கள் இந்த அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக மாறுங்கள். அதுதான் தேவை.
விமர்சனங்களைச் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம். ஊடகவியலாளர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அன்று முடிவுக்கு கொண்டு வர முடியாது என கூறப்பட்ட போரை நாம் முடிவுறுத்தினோம்.
அதேவிதமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri