ஊடகவியலாளர்களை அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக கோரும் ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்புவே நாம் வந்துள்ளோம். அவ்வாறெனில் நான் ஊடகவியலாளர்களிடம் கோருகின்றேன், நீங்கள் இந்த அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக மாறுங்கள். அதுதான் தேவை.
விமர்சனங்களைச் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம். ஊடகவியலாளர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அன்று முடிவுக்கு கொண்டு வர முடியாது என கூறப்பட்ட போரை நாம் முடிவுறுத்தினோம்.
அதேவிதமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri