பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
உதவி வகுப்புகள்
நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் குறித்த செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டிய காலங்கள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை உதவி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri