கட்புலனற்றோர் அடுத்த தேர்தலில் வாக்களிக்க விசேட ஏற்பாடு
கட்புலனற்றோர் அடுத்த தேர்தலில் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஏற்பாடு தொடர்பான விசேட மாதிரி வேலைத்திட்டம் நேற்று (16.02.2024) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட திட்டத்தின் கீழ் Braille முறையில் அச்சிடப்பட்ட கட்சிகளின் பெயர்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய வேலைத்திட்டம்
தேர்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் கட்புலனற்றோர், தனித்து வாக்களிக்கும் உரிமையை அனுபவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பார்வையற்றோர் மற்றும் பார்வையற்ற சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இப்புதிய வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டு நடைமுறை சோதனையும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
