அறுகம்பை எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவித்தல்

Sri Lanka Police Investigation Tourism Ministry Of Public Security
By Dharu Oct 23, 2024 09:23 AM GMT
Report

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது .

இதன்படி அவசர தகவல்களுக்கு 1997 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பேரில் பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் - அமெரிக்கா எச்சரிக்கை

பொலிஸ் திணைக்கள அறிக்கை

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அறுகம்பை எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவித்தல் | Special Notification Issued By Police To Tourists

இதன்படி பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

கைது செய்யப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

கைது செய்யப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

சுற்றுலாப் பயணிகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடான இலங்கையில்,  நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி, அறிவு பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு தேவையான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

இதன்படி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பின் பேரில், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தவுள்ளன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பொலிஸ் சுற்றுலாப் பிரிவு மேலும் பலப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான விசேட அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளார்.

பூர்வாங்க நடவடிக்கையாக, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இன்று முதல் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் 1997 இலங்கை பொலிஸ் குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது.

மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

அமெரிக்க தூதரக எச்சரிக்கை 

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் சொந்த துறையில் உள்ள அனைத்து மக்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. மற்றும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க பொலிஸார் தங்கள் வரம்பிற்குள் சிறந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறுகம்பை எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவித்தல் | Special Notification Issued By Police To Tourists

வெளிநாட்டு திருடர்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழியர்களால் ஏற்படக்கூடிய துன்புறுத்தல்கள் தொடர்பில் சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும்.

 இதேவேளை, அமெரிக்க பிரஜைகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி - அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி - அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை

அறுகம்பே சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்” என்றுள்ளது.



மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US