வருமான வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..
மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை 1944 அல்லது www.ird.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri