சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் நாளை (03.02.2023) இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்திருந்தது.
எனவே புதிய அமர்வு இந்த மாதம் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.