இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கூடும் தேர்தல்கள் திணைக்களம்!
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு, எவ்வாறு தலையிடுவது என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்க காலம் முடிவடையும்போது, தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை இங்கு குறிப்பிடத்தக்கது.