மொடர்னா தடுப்பூசி குறித்து வெளியான போலி செய்தி! தீவிர விசாரணை ஆரம்பம்
கொவிட் தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னா தடுப்பூசி குறித்து போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களை கண்டறியும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எனவும், அதில் நனோ தொழில்நுட்பம் உள்ளடங்கியுள்ளதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசி தொடர்பில் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படும் என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த போலிப் பிரச்சாரம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam