மூன்று அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் ஜனாதிபதி : வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பொறுப்பின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகள் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுற்றுலாத்துறை, காணி அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
பதவிகளுக்கான வெற்றிடங்கள்
முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர்.
இருப்பினும், தற்போது அவர்கள் பதவிகளை இழந்துள்ளமையினால் குறித்த அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்களை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து நிரப்பும் நோக்கில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
