உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
மாநகர சபை கட்டளைச் சட்டம் 252 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன் பந்தி (அ) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபயரத்னவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும 274 பிரதேச சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும், உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்களை, ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையகம் பரிசீலித்து வருகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
