பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்புற இடம்பெற்ற தீபாவளிப்பண்டிகை நிகழ்வு
நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சவின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தேறியுள்ளது.
சிறப்புமிகு இந்த நிகழ்வினை, பிரதமரின் பாரியாரான சிராந்தி ராஜபக்ச அம்மையார் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.
தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும் அவரது பாரியாரினால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பட்சணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் விசேட அம்சமாக இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபிட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்கு, துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்சவினால் நிகழ்விலே கலந்து கொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை திருநாட்டின் சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக இச் சிறப்பு மிகு
நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
