கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் (video)
மக்கள் பயன்பாட்டிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16.02.2023) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் வனலாகா திணைக்களம் மற்றும் வனஜீவராசி திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு
நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்த காணிகளை குறித்த திணைக்களங்கள் தம்வசப்படுத்தியிருந்த நிலையில், அவற்றை விடுவிக்குமாறு மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர் என கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டி உள்ளதாகவும், விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
[8Y7C0T ]
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன், ஜனாதிபதியின் வடக்குக்கான விசேட செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




