பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல்

Government Of Sri Lanka Ministry Of Public Security
By Dharu May 24, 2024 01:32 PM GMT
Report

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்(Pramitha Tennakoon) தலைமையில் இன்று(24) இடம்பெற்றுள்ளது.

மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன்

ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன்

முகாமைத்துவ மத்திய நிலையம்

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் 18 மாவட்டங்களில் 9616 குடும்பங்களைச் சேர்ந்த 34880 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அரச திணைக்களங்கள், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிவாரண சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்புபடை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்ககாக முன்னெடுத்து வரும் துரித நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல் | Special Discussion On Emergency Situations

அண்மைக்காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'சுரகிமு' நிகழ்ச்சியின் மூலம் பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தில் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக விழுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆதரவையும் அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

மூன்று பெண்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

மூன்று பெண்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

வெள்ளப்பெருக்கு

அத்துடன், வீதியோரம் மரங்கள் நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல் | Special Discussion On Emergency Situations

நாட்டில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீதியில் குவிக்கப்பட்ட பெருந்தொகை மரக்கறி - கடலென திரண்ட மக்கள் வெள்ளம்

வீதியில் குவிக்கப்பட்ட பெருந்தொகை மரக்கறி - கடலென திரண்ட மக்கள் வெள்ளம்

 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுன்னாகம், Scarborough, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, ஊரெழு, கொழும்பு, Zambia, South Africa

06 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

07 Jun, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, Toronto, Canada

07 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிறிஸ்பேன், Australia

31 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், New Malden, United Kingdom

26 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Brampton, Canada

03 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜேர்மனி, Germany, Lohne, Germany

05 Jun, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers, France

31 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US