ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன்

Jaffna Ranil Wickremesinghe Jaffna Teaching Hospital
By Dharu May 24, 2024 11:48 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாகத் தெரிவிக்கும் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), அதிகாரப் பரவலாக்க நோக்குடன்  ஜனநாகயத்தைப் படுகொலைசெய்த ஒரு ஜனநாயகப் படுகொலையாளி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலே இவ்வருடத்திற்குள் முதலில் இடம்பெறுமென அமைச்சரவையில் தெரிவித்துவிட்டு, தமிழ்மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு, தேர்தல் பிரசார நோக்குடனேயே ரணில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்து மற்றும், அவரின் வடக்கிற்கான விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல்

“ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பிற்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடாத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கவுள்ளதாக கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலைக் கட்டடங்கள் சிலவற்றைத் திறந்து வைப்பதுடன், மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன் | Election Campaign Is The Purpose Of North Visit

ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாக ஜனாதிபதி  குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தலைப்பற்றியும், பொதுத்தேர்தலைப்பற்றியும் மாத்திரமா குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதிகாரப் பரவலாக்க நோக்குடன் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் பற்றி இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லையா?

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிவாரா? அவர் முதலில் இலங்கையின் அரசியலமைப்பைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். அதன்பிற்பாடு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதைப்பற்றிச் சித்திக்கலாம்.

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

அதிகாரப் பரவலாக்கம்

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை பாதுகாப்பதானால் முதலில் மாகாணசபைத் தேர்தல்களையும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களையும் எப்போதோ நடாத்தியிருக்கவேண்டும்.

ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன் | Election Campaign Is The Purpose Of North Visit

மாகாணசபைகளதும், உள்ளூராட்சிமன்றங்களதும் ஆட்சிக்காலங்கள் முடிவுற்று பல வருடங்கள் கடந்திருக்கின்றன. எனினும் இதுவரை இந்தத் தேர்தல்களை நாடாத்துவதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மிக முக்கியமாக இந்த மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சி மன்றங்கள் என்பன அதிகாரப் பரவலாக்கத்தின் குறியீடுகளாகப் பார்கப்படுகின்றன. குறிப்பாக மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சிமன்றங்களூடாக முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்று கூறிவிட முடியாது.

எனினும் இந்த மணகாணசபை மற்றும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தாததன் மூலம் அற்பசாெற்ப அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு பகிரத் தயாராக இல்லை என்ற விடயத்தை ஆட்சியாளர்கள் கூறுவதாகவே பார்க்க முடிகின்றது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர புயல்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர புயல்

ரணில் விக்ரமசிங்க

அத்தோடு இந்தத் தேர்தல்கள் நடத்தப்படாததன்மூலம், நாட்டு மக்கள் தமது ஜனநாயகக் கடமைகளையாற்றுவதற்கும், ஜனநாயகத் தெரிவை மேற்கொள்வதற்கும் ஆட்சியாளர்கள் இடமளிக்கவில்லை.

ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன் | Election Campaign Is The Purpose Of North Visit

இது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். இத்தகையதொரு ஜனநாயகப் படுகொலையாளியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாகத் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இவ்வாறு தன்னை ஒரு ஜனநாயகப் காப்பாளனாக அறிமுகப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை அறுவடைசெய்வதற்காகவே ரணில் இவ்வாறு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடாத்தப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் பிரச்சார நோக்கிலேயே அவர், இவ்வாறு வடக்கிற்குப் புறப்பட்டுள்ளார்.” என்றார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட கடன் திட்டங்கள்: வெளியான அறிவிப்பு

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட கடன் திட்டங்கள்: வெளியான அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US