15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைக்காக வீடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்காக திரும்புவதால், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை இயக்கப்படுவதாக ஹட்டன் டிப்போ உதவி முகாமையாளர் ஹேஸ்லி தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 103 விசேட பேருந்துகள் மூலம் விடுமுறைக்காக ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் காரணத்தால் பயணிகள் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவை
இன்றைய தினம் (15.04.2026) காலை முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில், கொழும்பு நோக்கி சுமார் 15 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் நேரக்கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய தினம் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தமை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையகப் பகுதிகளுக்கான தொடருந்து சேவைகள் இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குவதால், பெரும்பாலான பயணிகள் பொது பேருந்து சேவையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகமானோர் பணிக்காக திரும்பும் நிலையில், போதுமான அளவு பேருந்துகள் சேவையில்ஈடுபடுத்தப்படுவது அவசியம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 23 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam