கண்ணீரால் சொல்ல முடியாத வலி..! சபையில் மிகுந்த கவலையோடு பேசிய ஜனாதிபதி அநுர
update - 05:38pm
கண்ணீரால் கூட சொல்ல முடியாத வேதனையை இலங்கையர்கள் அனுபவித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் அமர்வில் உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.
இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்ப இயலாதது. அதைவிட காணாமல் போனோரை எண்ணி, அவர்களது குடும்பத்தார் என்றாவது வருவார்கள் என்று தினம் தினம் வலியோடு கடக்க வேண்டிய நிலை இருக்கும்.
இதனை நாங்கள் கடந்த கால யுத்தத்தின் போது அதிகமாக உணர்ந்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது.
மக்களுக்கான செய்தி
இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பு வெளிவரும்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam