இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாணயக் கொள்கைச் சபை நேற்று (28) இடம்பெற்ற கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய நிலையிலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (Overnight Policy Rate) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நிதியியல் சந்தைகளில் மத்திய வங்கியின் நிலைப்பாடு
ஓரிரவு கொள்கை வீதம் என்பது, மத்திய வங்கி தனது நிதியியல் கொள்கை நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் முதல் வட்டி விகிதமாக செயல்படும்.
இது, முக்கியமாக நிதியியல் சந்தைகளில் மத்திய வங்கியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதுடன், பரிமாற்றப் பொருளாதாரத்தில் நம்பகத்தன்மையையும் உருவாக்கும்.
இந்த மாற்றம், மத்திய வங்கியின் நிதியியல் கொள்கை மற்றும் வட்டி வீதங்களை பயன்படுத்தி பொருளாதார செயல்திறன் மற்றும் சந்தைப் பரிமாற்றங்களை மேம்படுத்த உதவும்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்
மேலும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் இலக்கு மட்டத்தை நோக்கிச் செல்லத் தொடங்குவதற்கு முன், ஓரிரவு கொள்கை வீதம் அடுத்த சில மாதங்களில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாவருடம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI) ஏற்படும் மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 டிசம்பரில் தொடர்ந்து நான்காவது மாதமாக எதிர்மறையான நிலையில் இருந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக மின்சாரக் கட்டணங்கள் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலை திருத்தங்களால் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
