பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வறுமையை ஒழிக்கும் வேலைத் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேர் கொண்ட முறையான அமைச்சரவை ஒன்றை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.
கிராமப் புற மக்களின் வறுமையை தீர்க்க விசேட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
2025ஆம் ஆண்டு முதல் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட உதவித் தொகை ஒன்றை வழங்கவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 8 மணி நேரம் முன்

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
