தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடநெருக்கடி! - அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக கொழும்பில் அறிகுறி இல்லாத கொவிட் -19 நோயாளிகளுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் இடைநிலை சிகிச்சை மையங்களாக மாற்றக்கூடிய கைவிடப்பட்ட கட்டிடங்களை அரசாங்கம் தீவிரமாக தேடி வருகின்றது.
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) இந்த அவசர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வரும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு தற்போதுள்ள இடைநிலை சிகிச்சை மையங்களில் இடம் போதாமல் இருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் ஈடுபட்டுள்ளது.
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam