தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் பின்னால் வந்த குறித்த லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணை
இதற்கமைய விபத்து இடம்பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அவசர மீட்பு அதிகாரிகள், லொறியில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மெலும், லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சாரதியின் கவனயீனத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கலானிகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri