சனல்-4 காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் : நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிப்பு
சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்-4 ஊடகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை அரசியல்வாதிகளை மேற்கோள் காட்டியும் சனல்-4 சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
சனல்-4 காணொளி
மேலும், சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவிக்குழு
இந்த சேனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
