மக்கள் நலனுக்கான எமது குரல் என்றும் ஒலிக்கும் - இம்ரான்

trincomalee imran mahroof
By Badurdeen Siyana Jun 21, 2021 05:27 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in அரசியல்
Report

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொதுமக்களை இன்னல்களுக்குட் படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக எனது குரல் என்றும் ஒலிக்கும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பொதுமக்கள் முகங்கொடுத்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றிய எந்தவொரு சிந்தனையுமின்றி அரசாங்கம் எரிபொருளுக்கு அதிகபட்ச விலையுயர்வை செய்துள்ளது.

ஏற்கனவே கஷ்டங்களை அனுபவித்து வரும் பொதுமக்களுக்கு இது மேலும் சுமையைக் கூட்டியுள்ளது. குறிப்பாக மீனவர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, அவர்கள் மிகச் சிலருடன் சேர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்த எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக அடையாள எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டேன்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எனக்கும், அந்த மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இதனால் நீதிமன்றத்துக்குச் சென்று தற்போது நாம் பிணையில் வந்துள்ளோம். நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம், பயணத்தடை என்பன அமுலில் இருந்தாலும் நாளாந்தம் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதேபோல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இங்கு சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும் பொதுமக்களும் நிவாரணம் வழங்குகின்ற குழுவினரும் ஒன்று சேர்கின்றனர்.

ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அலுவலகங்கள் இயங்குகின்றன.

அலுவலக ஊழியர்களின் ஆசன அமைப்பு முறை நமக்கெல்லாம் தெரியும். வரையறுக்கப்பட்ட ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் அருகருகேயுள்ள தங்களது ஆசனங்களில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அன்றாடம் எல்லா நடவடிக்கைகளுக்கும் அனுமதி இருக்கின்ற போது அரசாங்கத்திற்கு பொது மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை எடுத்துச் சொல்ல மட்டும் எமக்கு அனுமதி இல்லை.

இது தான் அரசாங்கத்தின் கொள்கை. அரிசி, மாவு, கடலை, பயறு உள்ளிட்ட சகல உணவுப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன.

எனினும், பாமர மக்களால் வழமை போல தொழில் செய்யவோ வருமானம் ஈட்டவோ முடியாத கட்டுப்பாட்டு நிலை காணப்படுகின்றது.

எனவே, வருமானம் இழந்துள்ள பலர் தமது நாளாந்த உணவுக்காக பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற இவ்வேளையில் அரசாங்கம் அதிகபட்ச எரிபொருள் விலை அதிகரிப்பை செய்துள்ளது.

கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்கி இருந்து சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு பொதுமக்களின் இந்தக் கஷ்டங்கள் தெரியாது. அவர்களுக்கு பொது மக்களின் இந்தக் கஷ்டங்கள் தெரிந்திருந்தால் எரிபொருளுக்கு இவ்வாறான அதிகபட்ச விலை உயர்வு வந்திருக்காது.

நான், எனது கட்சிக்கும் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் இழைத்து 20 க்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை.

அதற்காக எம்மை அடக்கி பொதுமக்களுக்கான எமது குரலை நசுக்க அரசு கவனம் செலுத்துகின்றது. இதனை பொதுமக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். எனவே, பொதுமக்களுக்கான எமது சாத்வீகப் போராட்டம் தொடரும். பொதுமக்கள் எதிர்நோக்கும் சகல துன்பங்களிலும் நாம் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US