11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஞாயிற்றுகிழமை இலங்கை - தம்புள்ளையில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
29 பந்துகளில் 94 ரன்கள்
அந்தப்போட்டியில், இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பதற்கு முன்பு, வெறும் 11 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் அடங்கிய சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம், 324.14 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அமைந்துள்ளதுடன், பட்டத்திற்கான போட்டியில் இந்தியா 'ஏ' அணியை உறுதியான கட்டுப்பாட்டில் வைத்தது.

இருப்பினும், ஒன்பதாவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் சஹான் அரச்சிங்கேவால் அவர் ஆட்டமிழந்தார், இதன் மூலம் மற்றொரு உலக சாதனைக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த சாதனையை முறியடிக்கும் நிலையில், அந்த இடது கை ஆட்டக்காரர் இருந்தார். இந்தச் சாதனை தற்போது ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கிடம் உள்ளது.
இவர், 2023-2024 சீசனில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டாஸ்மேனியாவுக்கு எதிராக விளையாடிய போது 29 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
2006ஆம் இருந்த சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி
முதலில் பந்துவீசத் தீர்மானித்த இலங்கை 'ஏ' அணிக்குப் பிறகு இன்னிங்ஸைத் தொடங்கிய சூர்யவன்ஷி, பந்துவீச்சாளர்கள் மீது உடனடியாகத் தாக்குதலைத் தொடுத்தார்.

அவர் தனது அரை சதத்தை வெறும் 11 பந்துகளில் எட்டியுள்ளார். இதன் மூலம், 2005-06 சீசன் முதல் இலங்கையின் கௌசல்யா வீரரத்ன 12 பந்துகளில் வைத்திருந்த முந்தைய லிஸ்ட் ஏ சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இந்த இன்னிங்ஸ், விஜய் ஹசாரே கோப்பையில் 15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் மும்பை வீரர் சர்பராஸ் கான் வைத்திருந்த, லிஸ்ட் ஏ-யின் அதிவேக அரைசதத்திற்கான இந்திய சாதனையையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
You may Like THIS..